Wednesday, December 1, 2010

பத்து பைசா

எனக்கு மட்டுமென்ன ஆசை இல்லாமலா உன்னை என்னோடு  பொக்கிசமாய் வைத்திருக்க !!!!!!!
       மளிகை கடைகாரனுக்கு எங்கடி தெரிய போகுது !!
       நான் ஒன்னாவது படிக்கைலே ஏதோ ஒன்னாவது
       வாங்கணுமுன்னா நீதானடி என் கையிலிருப்ப !!
      அடுத்த நாள் ஆசைக்கு  முன்னாடி நாள் அழுதும்
      முன்னத்த நாள் நிராகாசைக்கு இன்னத்த நாள் அழுதும்                                            அம்மாகிட்ட உன்ன வாங்கறதுக்கு அடியையும் வாங்கி விளையாட
     போவேனடி!! அன்னைக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்க
     உனக்காக தானடி  அம்மாகிட்டயும் அடி வாங்கினேன் ??
     இன்னைக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தேடிதாண்டி
     வாங்க வேண்டிருக்கு!!!
     உன்ன தேடி கண்டுபுடிச்சி எடுத்த  என் சிட்டு குருவி பையன்கிட்ட
     மளிகை கடைக்காரன் சொன்னானாம்  ????                                                                                     இந்த காசு செல்லா காசுன்னு !!!
                                அவனுக்கு எங்கடி தெரிய போகுது நீ என் செல்லகாசுன்னு !!!!
என்றும் உன் நினைவுடன்...                             
நிர்மல் ...........

   

Thursday, October 14, 2010

chummaa

தலையணை காதல் ::::: உன்னோடு ஒரு பகல் உன் படுக்கையறையில் இருக்க ஆசை ! எனக்கல்ல!! என் தலையனைக்கு .......
என் புலம்பல் சொல்ல மட்டும் . ( இது நானல்ல என் தலையணை )

என் மேல் நீ !! உன் கீழ் (நானல்ல ) என் தலையணை !!
உன் தலைக்கு கீழ் வேண்டாமடி உன் பாதங்களை கொடு தாங்குகிறேன் !!!! எனை விடவும் லேசானது என்பதால் அல்ல !!!
உனிடம் முறையிடுவதற்கு பதிலாக உன் கால் கொலுசிடம் முறையிட சொல்லி உன் காதலன் உத்தரவு எனக்கு !! ( இதுவும் நானல்ல என் தலையணையே )...

ஆள் மாறாட்டம் கூட நடக்கலாம் உன் தலையணைக்கும் என் தலையணைக்கும் !! யாருக்கு தெரியும் .. பிறகு உன் புலம்பலை ( காதலை) என் தலையணை கேட்கும் விபரீதம் நடக்கலாம் பார்த்துக்கொள்...
காதல் பிறக்கும் !!!! நமக்கல்ல ............
நம் தலயனைகளுக்கு.. அனுப்பி வையடி உன் தலையனையை என்னிடம் ..உன் தலையணைக்கும் இதே எண்ணமாம் !!!!!
( இதுவும் நானல்ல என் தலையணையே )

அந்த இழவம் பஞ்சு ( தலையணை அல்ல ) உன் நெஞ்சத்தால் என் தலையை அணையடி !! ( இது மட்டும் நானடி)--- நிர்மல் pki